இந்த அறிவிப்பை கடந்த சனிக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. 76 வயதான ஆனந்திபென் பட்டேல், மோடி பிரதமரான பின் குஜராத் மாநில முதல்வராக 2 ஆண்டுகள் பதவி வகித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் ஆளுநராக உள்ள ஓ.பி.கோலி, மத்திய பிரதேச மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதவியில் இருந்தார். இந்நிலையில் முழுநேர ஆளுநராக ஆனந்திபென் நியமிக்கப்பட்டுள்ளார். 


இதையடுத்து, மத்திய பிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் இன்று பதவியேற்றார். இவருக்கு, அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.