மத்தியப்பிரதேசம், ஒடிசா, மாநிலங்களில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உயிரிழந்துள்ளதையடுத்து, மத்தியப்பிரதேச மாநிலம் மங்காலி, கொலாரஸ் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் மற்றும் ஒடிசா மாநிலம் பீஜப்பூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. 



இதனையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். இதற்கான ஓட்டு எண்ணிக்கை வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.