கேரளாவில் கொச்சி நகரத்தில் மெரில் சேட்டிலைட் அகாடமி என்ற புதிய சுகாதார அமைப்பை தொடங்கியுள்ளது மெரில் நிறுவனம். இந்த சுகாதார அமைப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் வேலையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், மக்களைக் கவனித்துக்கொள்வதில் சிறந்து விளங்கவும் உதவும். மருத்துவ துறையில் புதிய புதிய மாற்றங்கள் வந்து கொண்டே இருப்பதால், மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்குத் தேவையான பயிற்சியைப் பெறுவதை மெரில் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவுவதில் மெரில் அதிகம் அக்கறை காட்டுகிறது. மெரில் சேட்டிலைட் அகாடமி மக்கள் எளிய மற்றும் நடைமுறை ரீதியாக கற்றுக்கொள்ள உதவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பெண் மருத்துவர் கொலையில் ட்விஸ்ட் - போலீஸ் அதிகாரிக்கும் உண்மை கண்டறியும் டெஸ்ட்... ஏன்?


இங்கு வெறும் புத்தகங்களிலிருந்து மட்டும் கற்பிக்காமல், அவர்கள் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்தவும் பயிற்சியளிக்கின்றனர். நோயாளிகளின் பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கேரளாவின் வலுவான சுகாதார கட்டமைப்பிற்குள் இந்த கொச்சி அகாடமி அமைக்கப்பட்டது. இந்த அகாடமி தென்னிந்தியாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெரில் சேட்டிலைட் அகாடமி, ஒரு சிறப்பு பள்ளியாகும், இங்கு புதிய முறையில் கற்றுக்கொள்ள முடியும். இது சிமுலேட்டர்கள் மற்றும் ரோபோக்கள் போன்ற லேட்டஸ்ட் கருவிகளைக் கொண்டுள்ளது.


இதன் மூலம் அனைவரும் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்த உதவுகிறது. சிறந்த ஒலி மற்றும் வீடியோ உபகரணங்களுடன் கூடிய பெரிய வகுப்பறைகள் மற்றும் பயிற்சி திறன்களுக்கான சிறப்பு அறைகள் உள்ளன. மெரில்லின் தலைவரான மணீஷ் தேஷ்முக், மருத்துவர்கள் நோயாளிகளை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்கு நல்ல மருத்துவப் பயிற்சி பெறுவது மிகவும் முக்கியம் என்று தாங்கள் கருதுவதாகப் பகிர்ந்துகொண்டார். அதனால்தான் கொச்சியில் உள்ள இந்த புதிய அகாடமி தொடங்கியதாக தெரிவித்தார். தென்னிந்தியாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிறந்த கருவிகள் மற்றும் பயிற்சிகளை நாங்கள் வழங்குகிறோம்.


அதனால் மக்கள் நன்றாக உணர உதவும் சமீபத்திய வழிகளை அவர்கள் அறிந்துகொள்ள முடியும். ஒரு சிறந்த வேலையைச் செய்வதற்குத் தேவையான அனைத்தையும் எங்களிடம் வைத்து கொள்வதே குறிக்கோள். இந்தத் திட்டத்தின் ஒரு பெரிய பகுதியாக இந்த சிறப்பு அகாடமி உள்ளது என்று தெரிவித்தார். மெரில் இரண்டு முக்கியமான அமைப்பை இந்தியாவில் கொண்டுள்ளது. ஒன்று குஜராத்தில் உள்ள வாபி அகாடமி, இது உலகெங்கிலும் உள்ள மெரில் கல்வித் திட்டங்களுக்கு முக்கிய இடமாகும். மற்றொன்று டெல்லியில் உள்ளது, இது மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சிறப்புத் திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. மேலும் ஸ்பெயின், அமெரிக்கா, தென் கொரியா, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலுள்ள கொல்கத்தாவில் விரைவில் பள்ளிகளைத் திறக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: அன்று நள்ளிரவு நடந்தது என்ன? விசாரணையில் அந்த 4 டாக்டர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ