கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 3-வது நாளான அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று அவர், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். 



இதனையடுத்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-


ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தருவதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். சீனா 24 மணி நேரத்தில் 50,000 இளைஞர்களுக்கு வேலை தருகிறது. ஆனால் பிரதமர் மோடி அரசு 24 மணி நேரத்தில் 450 பேருக்கு தான் வேலை தருகிறது என்றார்.


அவருடன் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் எம் வீரப்ப மொய்லி மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே உடன் இருந்தனர்