Home Insurance Scheme: ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், நிலநடுக்கம், தீ அல்லது இயற்கை பேரிடர் காரணமாக லட்சக்கணக்கான மக்களின் வீடுகளை இழக்கினர்னர், அல்லது வீட்டில் பெருத்த சேதம் உண்டாகிறது. வீடுகளை இழக்கும், வீடுகளில் பெருத்த சேதம் அடைந்த மக்களுக்கான வீட்டு காப்பீடு தொடர்பான மிகப் பெரிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் வீட்டுக் காப்பீட்டுத் திட்டம்!


ஜீ நியூஸுக்கு (Zee News) கிடைத்த பிரத்யேக தகவல்களின்படி, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJY) மற்றும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகியவற்றின் அடிப்படையில் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட உள்ள வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளின் போது மக்களின் வீடுகளுக்கு ஏற்படும் சேதங்களை ஈடுகட்ட மத்திய அரசு ரூ .3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையை வழங்கும்.  மேலும், வீட்டில் உள்ள பொருட்களுக்கு ரூ .3 லட்சம் வரை பாதுகாப்பு வழங்கப்படும். பாலிசி எடுக்கும் குடும்பத்தின் இரண்டு உறுப்பினர்களுக்கு ரூ .3 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீடு வழங்கப்படும்.


ALSO READ | "பணப்பலனும் இல்லை; பதவி உயர்வும் இல்லை" : அங்கலாய்க்கும் அரசு ஊழியர்கள்


பிரீமியம் தொகை


காப்பீட்டு திட்டம் குறித்து ஏற்கனவே ஒரு விரிவான கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. பாலிசி தொகை தொடர்பாக, காப்பிட்டு நிறுவனங்கள், 1000 ரூபாய்க்கு மேல் மேற்கோள் கொடுத்துள்ளன. ஆனால் இதை 500 ரூபாயாக குறைக்க மத்திய அரசு விரும்புகிறது. இதில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அடங்கும். தனியார் நிறுவனங்கள் பிரீமியத்தை குறைக்காவிட்டால், இந்த திட்டம்  நாடு முழுவதிலும் அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும். இருப்பினும், பிரீமியம் தொடர்பாக, காப்பீட்டு நிறுவனங்களுடன் அரசு தொடர்ந்து, பேச்சுவார்த்தை  மேற்கொண்டு வருகிறது.


ALSO READ | New Wage Code: இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்..!!


வீட்டு காப்பீட்டு திட்டம் கேம் சேஞ்சராக இருக்கும்


வீட்டுக் காப்பீடு (Home Insurance) பற்றி நம் நாட்டில் சுகாதார காப்பீடு, ஆயுள் காப்பீடு பற்றி அதிக விழிப்புணர்வு இல்லை. அரசாங்கத்தின் இந்த திட்டம் நுகர்வோர் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு விளையாட்டு மாற்றியாக நிரூபிக்க முடியும். இந்தத் திட்டத்தில் அரசாங்கம் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு திட்டம் பொது காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இருக்கும் மற்றும் அதன் பிரீமியம் PMJJY, PMSBY திட்டங்களில் செய்யப்படுவது போல் மக்களின் வங்கி கணக்கில் இணைக்கப்படும்.


ALSO READ | Good News! ஓட்டுநர் உரிமம், RC உள்ளிட்ட ஆவணங்களின் வேலிடிடி மேலும் நீட்டிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR