நேற்று (ஆகஸ்ட் 7) திங்களன்று மும்பையில் பெண்மணி ஒருவரின் சடலம் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விசாரணையில், 65 வயது மதிக்கத்தக்க ஆஷா சஹானி என்ற பெண்மணி அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், அவருடைய மகன் அமெரிக்காவில் மென்பொறியியலாளரக பணிபுரிவதாகவும் தெரியவந்தது.


அவரது கணவர் இறந்த பிறகு ஆந்தேரியில் உள்ள லோகந்த்வாலா வளாகத்தில் தனியாக தங்கியிருந்தார். அவரது ஒரே மகன் ரித்தூராஜ் ரோட்டரஜால் ஒரு மென்பொருள் பொறியாளர் ஆவார்.


ரோட்டரஜால் மும்பையில் இறங்கியதும், லோகன்வாலாவில் உள்ள தனது வீட்டிற்கு வந்தபிறகு, கதவை தட்டினர் ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.எனவே சாவி தயாரிப்பாளரைக் கொண்டு புது சாவியை வைத்து உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


அங்கே உடல் முழுவதும் சிதைந்த நிலையில் தன் தாயின் சடலம் மட்டுமே இருந்தது. ரோட்டரஜால் போலீசாரை தொடர்புகொண்டு நடந்ததை கூறினார். பின் பிரேதபரிசோதனைக்கு அனுப்பபட்டது.


ஓஷிவாரா போலீசார் இந்த மரணம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.