மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. 4–வது நாளாக இன்றும் மழை நீடித்துவருகிறது. இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


சாலைகள், ரெயில் தண்டவாளங்கள், விமான ஓடுபாதைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முடங்கி உள்ளது. மழை தீவிரமடைந்து வருவதால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பலத்த மழை காரணமாக மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மும்பையில் இன்னும் சில தினங்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.