மும்பையில் சந்தேகத்திற்குரிய வகையில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் காணப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை கடற்படை தளம் அருகே கருப்பு நிற உடையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் திரிவதை பார்த்ததாக பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கக்கூடும் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர்.


இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்றும் அவர்கள் கடல்மார்க்கமாக ஊடுருவி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மும்பை முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


மேலும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள. 


உரணை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில்:- பள்ளிக்கூட மாணவர்கள் கண்டதை போல் 5 பேர் ஆயுதங்களுடன் நின்றதை தானும் பார்த்ததாகவும், பயத்தில் வீட்டிற்குள் ஓடி விட்டதாகவும் கூறினார். 


மும்பை போலீஸ் நேற்று இரவு மர்ம நபர்களின் வரைபடைத்தை வெளியிட்டுள்ளனர்.