இணையதளத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராவார் என தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையதள செய்தி நிறுவனமான ‘டெய்லி ஹன்ட்’ மற்றும் நீல்சென் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு தொடர்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் சுமார் 54 லட்சம் மக்களிடம் ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தியது.


இந்நிலையில் இந்த கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ள முடிவுகளின்படி, , பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்கு ஆண்டு ஆட்சி தொடர்பாக 63% பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும், பிரதமர் மோடி அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என 50% மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 


அதில், இரண்டாவது முறையாக மோடி பிரதமரானால் தங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும் என பலர் குறிப்பிட்டுள்ளனர்.