இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு புதியதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய 200 ரூபாய் நோட்டுகளை கொண்டுவரும் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாக குழுவினால் கடந்த மார்ச் மாதம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அறிவிப்பினை வெளியிட அவர்கள் அதிகாரம் பெற்றவர்கள் கிடையாது என்ற நிலையில் அவர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்த அவர்கள் விரும்பவில்லை எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.


புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியானது இவ்வருட ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.