புதுடெல்லி-ன் மால்வியா நகரில் நைஜீரியாவை சேர்ந்த ஒருவரை, கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவில் நைஜீரியா நாட்டவரை கம்பத்தில் கட்டிவைத்து அக்கும்பல் கம்பால் கொடூரமாக தாக்குகின்றனர். 


நைஜீரியா நாட்டவர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுத் அந்த கும்பல் அதை கேட்காமல் அவரின் காலை ஒருவர் பிடிக்க, மற்றொருவர் கட்டையால் அடிக்கின்றார். மேலும் பெண் ஒருவர் அவரை செருப்பால் அடிக்கும் காட்சியும் இடம்பெற்று உள்ளது. 


தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இத்தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். 


முன்னதாக, நொய்டாவின் அன்சல் பிளாஸா மாலில் நைஜீரிய மாணவர் ஒருவரை மிருகத்தனமாக ஒரு பெரிய கும்பல் தாக்கியதை தொடர்ந்து இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது!