ஆலோசனை கூட்டங்களின் போது பிஸ்கட்டுகள், நொறுக்குத்தீனிகள் கொடுக்க கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சகத்தின் அலுவல் தொடர்பான கூட்டங்களில் பிஸ்கெட்டுகள் போன்ற திண்பண்டங்களுக்கு பதிலாக ஆரோக்கியமான சிற்றுண்டிகளை வழங்க அந்த அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை நோக்கி அடி எடுத்து வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், முக்கியமாக பிஸ்கெட்டுகள், குக்கீஸ் மற்றும் துரித உணவு வகைகளை கண்டிப்பாக வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அதற்கு பதிலாக பேரீச்சம்பழங்கள், வறுத்த பாதாம், வால்நட் உள்ளிட்ட பருப்பு வகைகள் ஆகியவை சிற்றுண்டிகளாக வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மகிழ்வுடன் வரவேற்பதாக, சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


அமைச்சின் அதிகாரி ANI நிறுவனத்திடம் கூறுகையில்; "இந்த நடவடிக்கையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் அமைச்சர் ஒரு டாக்டராக இருப்பதால் துரித உணவை சாப்பிடுவதால் ஏற்படும் மோசமான விளைவை அறிவார், எனவே இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அமைச்சில் நாங்கள் இந்த உத்தரவை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்."


அமைச்சின் ஒவ்வொரு துறையிலும், அதன் துறையின் கேன்டீன்களிலும் உத்தியோகபூர்வ அல்லது வேறு எந்த கூட்டங்களின் போதும் பிஸ்கட் மற்றும் பிற ஆரோக்கியமற்ற ஃபாஸ்ட்ஃபுட் பரிமாறக்கூடாது என்று இந்த சுற்றறிக்கை கடுமையான உத்தரவை வழங்குகிறது. 


ஃபாஸ்ட்ஃபுட் சுகாதார பிரச்சினைகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல வழிகளில் வாழ்வதை பாதிக்கிறது. துரித உணவை உட்கொள்வது உடல் பருமன், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில சமயங்களில் ஆபத்தானது. அமைச்சின் சுற்றறிக்கை 'ஆரோக்கியமான உணவு' குறித்து வலியுறுத்தியதுடன், 'லோபியா சன்னா, கஜோர், பூனா சன்னா, பாதம் மற்றும் அக்ரோட் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்கள் மட்டுமே என்று கூறினார்.