திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த ஜூலை 27 ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை ஏற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.


இதனையடுத்து மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களுக்கு தேசிய தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்ககப்பட்டுள்ளது!