மத்திய பட்ஜெட்டுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலை ரூ.3 வரை உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை பாதிக்காது என மத்திய போக்குவரத்துதுறைஅமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவையில் நேற்று மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெட்ரோல் டீசல் மீதான வரி ஒரு சதவிகிதம் சுங்கவரி உயர்த்தப்பட்டது.  அதேவேளையில், மின்சார வாகனங்கள் மீது பெரும் வரிச்சலுகைகளை வழங்கப்பட்டு உள்ளது. 


இந்நிலையில்,  நள்ளிரவு முதலே நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனினும் இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை பாதிக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணை விலைகள் குறைந்துவிட்டன,  இருந்தாலும் தற்போது கூட்டப்பட்டுள்ள கலால் வரி மற்றும் சாலை செஸ் அதிகரிப்பு தற்போதைய விகிதங்களை ஒரே மாதிரியாக வைத்திருக்கும் என்றும், குறைந்த சர்வதேச விலைகளால் ஏற்படும் பாதிப்புகளை  ஈடுசெய்யப்படும், மேலும் இந்த பணம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மாநில அரசாங்கங்களுக்கு  பெரிய அளவில் பங்களிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.


மேலும் இந்த வரி உயர்வு காரணமாக நாட்டிற்கு நிறைய வருவாய் கிடைக்கும் என்றும்,  இது நன்மையே அன்றி எந்தவொரு  எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது. இது முந்தைய பட்ஜெட்டில் சுமார் 78,000 கோடியாக இருந்தது, தற்போது, ரூ .83,000 கோடிக்கு மேல் சென்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.