திருவனந்தபுரம்: கேரள மாநிலத்யிலுள்ள மலப்புரம் என்கிற மாவட்டத்தின், கூட்டக்கல் என்ற பகுதியில் 17 வயது நிரம்பிய மாணவி ஒருவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.  இவரின் தந்தை அருகில் உள்ள ஒரு ஊரில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரின் தாயாரோ சற்று பார்வை குறைபாடு உள்ளவர்.  இந்த மாணவியின் வீட்டின் அருகில் 21 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். அந்த வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக,இந்த பெருக்கெடுத்த காதலால் இருவரும் தங்கள் காதலை வளர்க்க தனிமையை நாடி அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ,பலமுறை அந்த வாலிபர் மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து இருக்கிறார்.தன்னை தானே திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற எண்ணத்தில் மாணவியும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அவரது ஆசைக்கு இணங்கிவிட்டார்.  இந்த தனிமை பழக்கத்தினால் நாளடைவில் மாணவி கர்ப்பமடைந்து விட்டார். வீட்டிற்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்று எண்ணி இதனை பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்.வீட்டில் உள்ளவர்களிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லியுள்ளார்இதனால் இவரது பெற்றோர் அந்த மாணவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது,இருப்பினும் அவர் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் கூறவில்லை.


ALSO READ பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியடைய காரணம் மோடி அரசு: ராகேஷ் திகாயித்


சில நாட்களில் மாணவி நிறைமாத கர்ப்பிணி ஆனார்.இவருக்கு கடந்த 20-ம் தேதி பிரசவ வலி வந்துள்ளது.இதனால் யாரிடம் சொல்வது..? என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்து போன மாணவிக்கு திடீரென்று ஐடியா தோன்றியது.உடனே யூ டியூப்பில் ,பிரசவம் பார்ப்பது எப்படி? என்று தேடி வீடியோவை பார்த்துள்ளார். வீடியோ மூலம் தெரிந்துக்கொண்ட அவர் வீட்டு மாடியில் உள்ள அறை ஒன்றிற்கு சென்று கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டு பூட்டி கொண்டார். யூ டியூப்பில் பார்த்த தகவல்களின் அடிப்படையில் தனக்குதானே அவரே பிரசவம் பார்த்து கொண்டுள்ளார்.இதில் அவருக்கு அழகிய ஆண்குழந்தை ஒன்று  பிறந்ததுள்ளது. குழந்தையை பெற்றெடுத்த பின்னர் மாணவியே தனது தொப்புள் கொடியை அறுத்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார் .


பிரசவம் முடிந்து குழந்தையை எடுத்த பின்னர் மாணவி வழக்கம் போல் அல்லாமல் அடிக்கடி மாடிக்கு சென்றுள்ளார்.இதனை கவனித்த பெற்றோர் சந்தேகம் எழுந்தது. அதனையடுத்து அந்த அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டதையடுத்து,பெற்றோர், மாணவியின் அறைக்குள் ஓடி சென்று பார்த்துள்ளனர்.  அங்கு இருந்த குழந்தையை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் மாணவியிடம் விசாரித்ததில் பக்கத்து வீட்டு வாலிபரால் கர்ப்பம் ஆனதும்,பின்னர் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்ட தகவலும் தெரிந்துள்ளது.  அதனை தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர், அவரை மஞ்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அந்த மாணவியும், அவரது குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும்,அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி தரப்பிலிருந்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியிடமும், அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.மேலும் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபரையும் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர் .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ குழந்தையை வைத்துக்கொண்டு 40KM வேகத்தில் பைக் ஓட்டினால் அபராதம் -ALERT


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR