குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினராக டெல்லி வந்துள்ள தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசா உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகர் புதுடெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசா இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.


இந்தியா வந்த அவருக்கு இன்று காலை குடியரசுத்தலைவர் மாளிகையில் முப்படையினரின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் மோடியை சந்தித்த சிரில் ரமாபோசா பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.


இந்த ஆலோசனையின்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மைத்துறையில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றும் மூன்றாண்டுகால ஒப்பந்தம் கையொப்பமானது.


ஆலோசனை சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிரில் ரமாபோசா, இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் அமைந்திருந்ததாக தெரிவித்தார்.