உபி-யில் இறந்த மகனின் உடல்களை அவர்களின் தந்தையர் கைகளில் சுமந்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உபி மாநிலம் எடாவா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உதய்வீர் என்ற 45 வயது தொழிலாளி தன் 15 வயது மகனை தோளில் சுமந்து வந்தார். மருத்துவமனையில் டாக்டர்கள் அந்த சிறுவனுக்கு போதிய சிகிச்சை அளிக்காத்தால் சிறுவன் இறந்து போனான். 


இறந்த மகனின் உடலை தந்தை உயர்வீர் தன் தோளில் சுமந்தபடி மருத்துவமனையில் இருந்து வெளியேறி, 10 கி.மீ., தூரத்தில் உள்ள கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றார். 


இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ராஜிவ் யாதவ் கூறுகையில்:-


இது மிகவும் அவமானகரமான சம்பவம். அந்த சிறுவன் மருத்துவமனைக்கு எடுத்து வரும் போதே இறந்து விட்டான். மருத்துவமனையில் டாக்டர்கள் ஒரு பஸ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்தனர். 


இதனால் தான் சிறுவனின் தந்தைக்கு உதவ முடியவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.