டெல்லியின் தெற்கு பகுதியில் அமைத்துள்ள சத்தீர்பூர் பகுதியில் டெல்லி போலீசார், சிறப்பு காவல்துறையுடன் இணைந்து சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்களை என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, சதார்பூர் பகுதியில் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ராஜேஷ் பார்தி கும்பல் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வ்ழங்குவதா டெல்லி போலீசார் அறிவித்து இருந்தனர்.


இதையடுத்து, சந்தேகத்திற்குரிய அந்த கும்பல் சத்தீர்பூர் பகுதியில் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து டெல்லி போலீசின் சிறப்பு படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர். பின்னர் போலீசாரை கண்ட ரவுடிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


இதனையடுத்து, போலீசார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் 4 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரின் போது ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் காவலர்கள் 6 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதனால் தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.