சம்பல்பூர்: மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் உள்ள பிரதமர் மோடி, இன்று(செவ்வாய்க்கிழமை) ஒடிசா மாநிலத்தின் சபல்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது பேசிய பிரதமர் மோடி, இவ்வளவு கடுமையான வெப்பத்திலும் மக்கள் கூட்டத்தின் அலையை பார்க்கும் போது, இது நாட்டின் மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடிகிறது.


உங்கள் காவலாளி முன்பு ஊழல் கட்சிகளால் நிற்க முடியவில்லை. காவலாளி மீது நீங்கள் வைத்திருக்கும் பாசத்தை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு தெளிவாக தெரிகிறது, நீம்டும் மோடி அரசாங்கம் அதிகாரத்திற்கு வரும் என்று, அது ஒரு வலுவான, நேர்மையான அரசாங்கமாக இருக்கும் என்று கூறினார். 


நாளை மறுநாள் 2019 மக்களவை இரண்டடாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஒரிசா மாநிலத்தில் ஐந்து தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.