காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுடன் ராகுல் காந்தியின் அவதூறு வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசராணைக்கு வந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல்காந்திக்கு விதித்த அதிகபட்ச தண்டனையை உடனடியாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது. இதனால், ராகுல்காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் செல்லாது என்பதால், அவர் இனி நாடாளுமன்றம் செல்ல முடியும். ஆனால் அதற்கான அனுமதி உத்தரவை மக்களவை செயலகம் வழங்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!


மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. அதிகபட்ச தண்டனை விதிக்கபட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஒருவர் எம்எல்ஏ அல்லது எம்பியாக பதவியில் நீடிக்க முடியாது. அதனால், ராகுல்காந்தி உடனடியாக எம்பி என்ற தகுதியை இழந்தார். இந்த உத்தரவு வந்தவுடன் மக்களவை செயலகமும் உடனடியாக ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பையும் வெளியிட்டது. உடனடியாக மக்களவை உறுப்பினருக்காக வழங்கப்படும் வீட்டை காலி செய்த அவர், குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ஆனால், அந்த தீர்ப்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


இதனடிப்படையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதற்கான காரணத்தை சூரத் கீழமை நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கவில்லை என்று கூறி அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைத்தனர். இதனால் ராகுல்காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் உடனடியாக நாடாளுமன்றம் செல்ல முடியுமா? என்றால் முடியாது. இது குறித்து மக்களவை செயலகம் ஏற்கனவே வெளியிட்ட ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் அவர் நாடாளுமன்றம் செல்ல முடியும். 


இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி, ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து உடனடியாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார். ஒருவேளை மக்களவை செயலகம் அனுமதி கொடுத்தால் எதிர்கட்சிகள் கொடுத்திருக்கும் பிரதமர் மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திலேயே ராகுல்காந்தி பங்கெடுக்க வாய்ப்புகள் உள்ளன. திங்கட்கிழமை ராகுல்காந்தி நாடாளுமன்றம் செல்ல அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளது.


மேலும் படிக்க | ஓட்டல் அறையில் ரகசிய கேமரா... அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய மர்மக்குரல்: சிக்கியது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ