ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
டுவிட்டர் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தி:-  இந்தியாவில் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் எனது  ரம்ஜான் வாழ்த்துக்கள்.   இந்த நன்னாளில் மனித குலத்தின் சேவை மற்றும் ஏழை எளிய மக்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும். ரம்ஜான் கொண்டாட்டங்கள் நாட்டின் பரஸ்பர நல் எண்ணங்களையும் அர்ப்பணிப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இந்த ரம்ஜான் கொண்டாட்டங்கள் ஒவ்வொருவரையும் அன்பு வழியில்  நடக்கவும், சகோதரத்துவத்தை வளர்க்கவும் ஊக்கப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING