புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெள்ளிக்கிழமை வட்டி விகிதமான ரெப்போ ரேட்டை மாற்றாமல் 4 சதவீதமாகவே தொடர்ந்தது. மேலும், அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நிலைப்பாட்டையும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 8 ஆம் தேதி மத்திய வங்கி தனது நிதிநிலைக் கொள்கை முடிவுகளை அறிவித்தது. RBI ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 3.35 சதவீதமாகவும் தொடர முடிவு செய்துள்ளதாகக் கூறியது. ரெப்போ என்பது ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு தேவைப்படும் போது கடன் அளிக்கும் விகிதமாகும். இது பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கி பயன்படுத்தும் ஒரு கருவியாக உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் விகிதமாகும்.


RBI கவர்னர் சக்திகாந்த தாஸின் நிதிநிலைக் கொள்கை அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:


- கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ரிசர்வ் வங்கி 100 நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கவர்னர் தாஸ் கூறினார். 


- ரிசர்வ் வங்கி (RBI), வழிமுறைகளுக்கு புத்துயிர் அளிக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும் அனைவரையும் உள்ளடக்கிய நிலைப்பாட்டை தொடரும்.


- பணவீக்கப் பாதை எதிர்பார்த்ததை விட சாதகமாக மாறும், பொருளாதார நடவடிக்கைகள் மெதுவாக உயரும்.


ALSO READ: வங்கி ஊழியர்களுக்கு RBI அளித்த பரிசு: குடும்ப ஓய்வூதியத்தில் சூப்பர் அதிகரிப்பு 


- ரிசர்வ் வங்கி 2022 நிதியாண்டில், ஜிடிபி வளர்ச்சி இலக்கை 9.5 சதவிகிதமாக வைத்துள்ளது என கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.


- உணவு தானியங்களின் சாதனை உற்பத்தியின் காரணமாக வரும் மாதத்தில் உணவு பணவீக்கம் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


- உற்பத்தித் துறையில் திறன் பயன்பாடு Q2 இல் மீட்கப்பட்டது. அடுத்த காலாண்டுகளில் மேலும் மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


- நிதிநிலைக் கொள்கை, உள்நாட்டு சூழ்நிலை, மதிப்பீடு ஆகியவற்றை பொறுத்து இருக்கும்.


- IMPS வரம்பு ரூ .2 லட்சத்தில் இருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தப்படும்: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.


நிதிநிலைக் கொள்கை குழு, கடந்த ஏழு சந்தர்ப்பங்களாக ரெப்போ விகிதத்தை (Repo Rate) மாற்றாமல் வைத்திருந்தது. இப்போது, எம்பிசி தொடர்ந்து எட்டாவது முறையாக பாலிசி விகிதத்தை மாற்றாமல் இருக்க முடிவு செய்துள்ளது. 


ALSO READ: வங்கி லாக்கர் புதிய விதிகள்; 'இந்த' காரணத்திற்காக லாக்கரை வங்கிகள் உடைக்கலாம்..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR