நாட்டின் 68-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்!!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நாடு முழுவதும் 68-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. 


குடியரசுதின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மரியாதை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களின் பாரம்பரிய இசை முழங்கப்பட்டது. 


இந்த விழாவில் அபுதாபி இளவரசர் முஹம்மது பின் சயீத் அல் நயான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஹசித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்பட ஏராளமான  தலைவர்கள் பங்கேற்னர்.


குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பினர் குடியரசு தின விழாவின் போது நாசவேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 60,000 மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.