புதுடெல்லி: கொரோனா பயத்தில் (Corona) ஒரு நிவாரண செய்தி உள்ளது. தொற்றுநோய்களின் பரவல் வேகம் சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 3.68 லட்சம் புதி நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், தற்போது 87.77% பேர் குணமாகியுள்ளனர். 1.1% பேர் இறந்தனர். கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கான எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர் சில மாநிலங்களில், தினசரி தொற்றுக்களின் (Coronavirus) சரிவு ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர், டெல்லி, எம்.பி., மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப், தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் நிலைமை மேம்பட்டு வருகிறது என்றார்.


NEET மற்றும் PG தேர்வு குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்றும், அதன் பிறகும் தயாரிப்புக்கு ஒரு மாத காலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 100 நாட்கள் கோவிட் கடமையைச் செய்வோருக்கு பிரதமரின் கோவிட் விருது வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


ALSO READ | இந்தியா ஜூலை வரை கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம்: SII


ஆக்ஸிஜன் ஆலைக்கு அருகில் ஒரு கோவிட் மையத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அங்கு ஆக்ஸிஜனுடன் படுக்கைகள் இருக்கும். நாடு தற்போது 9000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. நாட்டில் ஆக்ஸிஜனுக்கு பஞ்சமில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் ஒதுக்கப்படுகிறது, அது தினசரி மதிப்பாய்வு செய்யப்பட்டு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. கிழக்கு இந்தியாவில் ஆக்ஸிஜன் உற்பத்தி மிக அதிகமாக உள்ளது, ஆனால் தேவை வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ளது, எனவே அங்கிருந்து இங்கு செல்ல நேரம் எடுக்கும். இந்த நேரத்தைக் குறைக்க, வெற்று சிலிண்டரை விமானத்தில் ஏற்றி, நிரப்பப்பட்ட சிலிண்டரை ரயில்வேயில் இருந்து கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 


எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறுகையில், இந்த நேரத்தில் ஏராளமானோர் CT Scanக்கு உட்பட்டுள்ளனர். அறிகுறியற்ற நபர்களும் CT Scan செய்யப்படுகிறார்கள். அதேசமயம், சி.டி ஸ்கானிலிருந்து புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. லேசான நோயில் CT Scan எடுக்க தேவையில்லை. ஆரம்ப கட்டத்தில் ஸ்டெராய்டுகளை உட்கொள்வது வைரஸ் அதிகரிக்கும். ஆரம்ப கட்டத்தில் ஸ்டெராய்டுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் மற்றும் தேவையற்ற சி.டி ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று அவர் கூறினார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR