பாட்டியாலா ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த பயணி ஒருவர் திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார். ரயில் கதவுக்கருகே உள்ள கம்பியை பிடித்து தொங்கியபடி அவர் போராடிய நிலையில் அங்கு பணியில் இருந்த ரகுபீர் சிங் என்ற ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் ஓடிச்சென்று ரயில் சக்கரங்களுக்குள் சிக்காமல் காப்பாற்றினார். அவர் காப்பாற்றப்பட்ட சில நிமிடங்களில் ரயிலும் நிறுத்தப்பட்டது. இந்த காட்சிகளின் சிசிடிவி பதிவை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சில சமயங்களில் நமது உயிரைக் காப்பாற்ற துணிச்சல் மிகுந்தவர்கள் வருவார்கள் என ரயில்வே பாதுகாப்புப் படை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரயிலின் அடியில் சிக்கிய குழந்தையும் தாயும் உயிருடன் மீட்பு!



இந்த பதிவில் மத்திய ரயில்வே அமைச்சகத்தையும், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவையும் ரயில்வே பாதுகாப்புப்படை டேக் செய்துள்ளது. 31 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் ரகுபீர் சிங்கிற்கு, சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | viral video: தண்டவாளத்தில் இருந்த பெண்ணை மயிரிழையில் காப்பாற்றிய போலீஸ்காரர்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR