சுங்கச்சாவடியில் உயர் அதிகாரிகளின் வாகனங்கள் கடக்கும் போது டோல்பிளாசா ஊழியர் அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுமார் 386 டோல்கேட்டுகள் உள்ளன. மத்திய அரசின் ஒப்புதலோடு டோல்பிளாசாவில் கடக்கும் வாகனங்கள் சுங்கவரி செலுத்த வேண்டும் என்பது தெரிந்ததே.


இந்நிலையில், ஆயுதம் தாங்கிய காவல்துறை உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் கடக்கும் போது அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும், அதேபோல் அவர்களுடைய அடையாள அட்டையை டோல்கேட்டில் உள்ள மூத்த அதிகாரிகள் தான் சோதனையிட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.