நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் உடனடி மரண தண்டனை நிறைவேற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அந்த மாணவிக்கு டெல்லி மருத்துவமனையிலும் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் நிர்பயா உயிழந்தார். 


இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுவாக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டப்படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்க்கு இந்திய தண்டனைச் சட்டம் 376A பிரிவின் கீழ் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டது.


மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு கடந்த ஆண்டு 2017 மே மாதம் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது தீர்ப்பளித்தது.


ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளின் மனுக்களை மறு சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இந்த வழக்கை விசாரித்த கீழ்கோர்ட்டு, 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.  உயர்நீதிமன்றமும், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.  
இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதன் மீது நடந்த விசாரணையில் இந்த தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.


இந்த நிலையில், நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது பற்றி நீதிபதிகள் மதன் பி. லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் அவர்கள், எதுபோன்ற கோரிக்கையை நீங்கள் வைக்கிறீர்கள்?  நீங்கள் நீதிமன்றத்தினை ஒரு நகைச்சுவை ஆக்குகிறீர்கள் என கூறினர். தொடர்ந்து இந்த மனுவை அவர்கள் தள்ளுபடி செய்துள்ளனர்.