புதுடெல்லி:  சோலன் மேக வெடிப்பில் குறைந்தது 7 பேர் பலி, மாநிலம் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதுதிங்கள்கிழமை சிம்லா, குலு மற்றும் மண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை மாநிலத்தின் பிராந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. வட இந்தியாவில் ஹிமாச்சல பிரதேசத்தில் சோலன் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) மேக வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் இறந்தனர். சோலனில் உள்ள கந்தகாட் துணைப்பிரிவின் ஜடோன் கிராமத்தில் பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு வீடுகளும் ஒரு மாட்டு தொழுவமும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் மக்களுக்கு செய்துக் கொடுப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



"சோலன் மாவட்டத்தில் உள்ள தவ்லா சப் டெஹ்சில் கிராமமான ஜாடோனில் நடந்த மேக வெடிப்பு சம்பவத்தில் 7 பேரின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததைப் பற்றி கேள்விப்பட்டு வருந்துகிறேன். பேரழிவிற்கு ஆளாகி துக்கமடைந்த குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று X (ட்விட்டர்) பக்கத்தில் இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் சுகு பதிவிட்டுள்ளார்.


"இந்த இக்கட்டான நேரத்தில் உங்களின் வலியிலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொள்கிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.



நிலைமை மோசமாகலாம்
திங்கட்கிழமை, இன்று சிம்லா, குலு மற்றும் மண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை பெய்யலாம் என வானிலை எச்சரிக்கையை மாநிலத்தின் பிராந்திய வானிலை துறை வெளியிட்டது.


திங்கள்கிழமை வெளியிட்ட எச்சரிக்கையில், "பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும், ஒரு சில இடங்களில் மிக கனமழை, மாநிலம் முழுவதும் தொடர வாய்ப்புள்ளது. மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சம்பா, காங்க்ரா, மண்டி, சிம்லா, குலு, லாஹவுல் மற்றும் ஸ்பிதி மற்றும் சிர்மௌர் ஆகிய இடங்களில் அதிக அளவில் மழை பொழியும்" என பிராந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


"பயஸ், ரஞ்சித் சாகர், பாங் அணை மற்றும் சட்லஜ் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பல இடங்களில் மிகக் கனமழை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிகக் கனமழை பெய்யும்" என்று அது மேலும் கூறியது.


மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், எந்த ஒரு சம்பவத்தைப் பற்றிய தகவலையும் பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர், மேலும் மக்கள் ஒன்றிணைந்து மழை அழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்.


தற்போதைய மழையின் அழிவு உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் பல மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உடனடியாக தகவல் தேவைப்படுகிறது. சம்பவம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஊடக நண்பர்களை, மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


(ஏஜென்சிகளின் உள்ளீடுகளுடன்)


மேலும் படிக்க | வெளுத்து வாங்கும் மழை, இந்தியா கேட்டையும் பதம் பார்க்குமா? தரையில் ஓடும் யமுனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ