கொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை  ஒரு வாளித் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் அங்கமாலி பரக்கடவு பகுதியை சேர்ந்தவர் சஜூஸ். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை நோரா மரியா. இந்த குழந்தை கொச்சியில் உள்ள தனியார் விடுதி அறையில் ஒரு வாளி தண்ணீருக்குள் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சதீஷ் என்பவரது தாய் சிக்ஸி என்பவரையும் அவருடைய கள்ளக்காதலன் ஜான் பினோயையும் கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். 


கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிக்ஸியும் அவரது கள்ளக்காதலன் பினோயும் தம்பதியர்  எனக்கூறி  மகனின் குழந்தைகளுடன் கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.


இந்த நிலையில் தங்கும் விடுதியில் உள்ள அறையில் வைத்து சிக்ஸிக்கும், பினோய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . இதைத்தொடர்ந்து சிக்ஸி அறையைவிட்டு வெளியே வந்துள்ளார்.


அந்த நேரம் அறையிலிருந்த பினோய் சிக்ஸியின் மேல் இருந்த கோவத்தை ஒன்றரை வயதான பிஞ்சு குழந்தையிடம் காட்டியுள்ளார். கழிவறையில் இருந்த வாளி தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்து கொன்றுள்ளார். 


மேலும் படிக்க | மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்! 


இதனிடையே வெளியே சென்றிருந்த சிக்ஸி அறைக்கு வந்து பார்த்தபோது குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது. உடனடியாக சிக்ஸி குழந்தையை எடுத்துக்கொண்டு, 2 மணி அளவில் குழந்தைக்கு வாந்தி மூச்சு திணறல் ஏற்பட்டதாக விடுதி ஊழியர்களிடம் கூறிவிட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு பரிசோதனை செய்து போது குழந்தை இறந்த தகவலை தெரிவித்து உள்ளனர். 


இவர்களது செய்கையில் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று காலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் இவர்கள் கணவன், மனைவி இல்லை என்று போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் குழந்தைக்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கை வந்தபின்பு போலீசார் பினோயிடம் நடத்திய தொடர் விசாரணையில் பினோய் குழந்தையை ஒரு வாளித் தண்ணீரில் மூழ்கடித்தது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.


மேலும் படிக்க | திருடிய நகைகளை பெண்களிடம் கொடுத்து உல்லாசம் அனுபவித்த முதியவர் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR