ஆஸ்திரேலியாவின் (Australia) தேசிய அறிவியல் அமைப்பின் ஆய்வக ஆய்வின்படி, COVID-19 க்கு காரணமான கொரோனா வைரஸ், ரூபாய் நோட்டுகள், கண்ணாடி - ஸ்மார்ட்போன் திரைகள், மற்றும் எஃகு உள்ளிட்ட பொதுவான மேற்பரப்புகளில் 28 நாட்கள் வரை உயிர்வாழக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைராலஜி ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, SARS-CoV-2 நீண்ட காலமாக பரப்புகளில் தொற்றுநோயாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. இது வழக்கமான கை கழுவுதல் மற்றும் மேற்பரப்புகளை சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளின் தேவையை வலுப்படுத்துகிறது. மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வைரஸ், மற்ற ஆய்வுகள் கண்டறிந்ததை விட நீண்ட காலத்திற்கு தொற்றுநோயாக இருந்தது என்பதை ஆய்வின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.


ஆஸ்திரேலியாவின் ACDP-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், SARS-CoV-2 குறைந்த வெப்பநிலையிலும், பருத்தி போன்றவற்றை ஒப்பிடும்போது, நுண்துளை இல்லாத அல்லது மென்மையான மேற்பரப்புகளான கண்ணாடி, எஃகு மற்றும் வினைல் போன்ற நுண்ணிய மேற்பரப்புகளில் நீண்ட காலம் உயிர் பிழைத்திருப்பது கண்டறியப்பட்டது.


ALSO READ: மீண்டும் கொரோனா மேடாகிறதா கோயம்பேடு? Health Department அளித்த பகீர் Report!!


ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான CSIRO ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸ் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை விட காகித நோட்டுகளில் நீண்ட காலம் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டறிந்தனர்.


"அறை வெப்பநிலை, அதாவது சுமார் 20 டிகிரி செல்சியஸில், வைரஸ் மிகவும் வலுவாக உள்ளது என்பதைக் கண்டறிந்தோம். மொபைல் போன் (Mobile Phone) திரைகள் மற்றும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளில் (Currency) காணப்படும் கண்ணாடி போன்ற மென்மையான மேற்பரப்பில் 28 நாட்கள் வைரஸ் உயிர் பிழைத்திருக்கும்" என்று ACDP துணை இயக்குநர் டெபி ஈகிள்ஸ் கூறினார்.


இந்த ஆய்வில், செயற்கை சளியில், வெவ்வேறு மேற்பரப்புகளில் வைரஸ் உலர்த்தப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கு நிகரான சூழல் உருவாக்கப்பட்டது.


மேலும் சோதனைகள் 30 மற்றும் 40 டிகிரி செல்சியஸில் மேற்கொள்ளப்பட்டன. வெப்பநிலை அதிகரித்ததால் உயிர்வாழும் நேரம் குறைகிறது. நேரடி சூரிய ஒளி வைரஸை விரைவாக செயலிழக்கச் செய்யும் என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளதால், புற ஊதா ஒளியின் விளைவை அகற்ற, இருட்டில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


"மேற்பரப்பு பரிமாற்றத்தின் துல்லியமான பங்கு, மேற்பரப்பு தொடர்புகளின் அளவு மற்றும் நோய்த்தொற்றுக்குத் தேவையான வைரஸின் அளவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த வைரஸ் மேற்பரப்புகளில் எவ்வளவு காலம் இருப்பது சாத்தியம் என்பதை நிறுவுவது உயர் தொடர்பு பகுதிகளில் ஆபத்து குறைப்பு உத்திகளை உருவாக்குவதற்கு முக்கியமானதாகும்," என்று ஈகிள்ஸ் கூறினார்.


ACDP இன் இயக்குனர் பேராசிரியர் ட்ரெவர் ட்ரூவின் கூற்றுப்படி, பல வைரஸ்கள் அவற்றின் ஹோஸ்டுக்கு வெளியே உள்ள பரப்புகளில் உயிர்ப்புடன் இருக்கின்றன. "அவை எவ்வளவு காலம் உயிர்வாழ முடியும் மற்றும் தொற்றுநோயாக இருக்க முடியும் என்பது வைரஸ் வகை, அளவு, மேற்பரப்பு, சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் அது எவ்வாறு டெபாசிட் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தது - எடுத்துக்காட்டாக, இருமலால் உமிழுப்படும் துளிகள், தொடுதல் போன்றவை" என்று ட்ரூ கூறினார். "உடல் திரவங்களில் உள்ள புரதங்கள் மற்றும் கொழுப்புகள் வைரஸ் உயிர்வாழும் நேரத்தையும் கணிசமாக அதிகரிக்கும்" என்று அவர் கூறினார்.


இறைச்சி பதப்படுத்தும் வசதிகள் போன்ற உயர் லிப்பிட் அல்லது புரத மாசுபாடு கொண்ட குளிர்ச்சியான சூழல்களில், SARS-CoV-2 இன் வெளிப்படையான நிலைத்தன்மையையும் பரவலையும் விளக்க இந்த ஆய்வு உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


ALSO READ: COVID Alert: கரன்சி நோட்டுகள் கொரோனாவை பரப்பும்: RBI


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR