Bangalore Crime News: பெங்களூரில் 4வது மாடியில் இருந்து 4 வயது காதுகேளாத சிறுமியை தூக்கி எறிந்துவிட்டு பால்கனியில் அமர்ந்திருந்த பெண். பெங்களூருவில் பெண் ஒருவர் தனது 4 வயது சிறுமியை நான்காவது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு, அந்த பெண் பால்கனியில் இருக்கும் கம்பியின் மீது ஏறி நின்றுக்கொண்டார். சிறுமியை தூக்கி எறிந்துவிட்டு பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சிக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சிறுமி மனநிலை சரியில்லாதவர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மனமுடந்த அந்த பெண், குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார் எனவும் கூறினார். அந்த பெண்ணின் பெயர் சுஷ்மா பரத்வாஜ் என்றும், சிறுமியின் பெயர் த்ரிதி பாலகிருஷ்ணன் என்றும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பெங்களூரு சம்பனகிராமநகரில் உள்ள அத்வைதா ஆஷ்ரயா அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுமியை மடியில் வைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்த பெண் சிறிது நேரம் கழித்து கீழே வீசியதை வீடியோவில் காணலாம். இதைத் தொடர்ந்து, அவர் உதவி செய்யுங்கள் என கூச்சலிட்டு உளார். அதன் பிறகு அவரும் பால்கனியில் இருந்து குதிக்க முயன்றார். ஆனால் அங்கு வந்த சிலர் அவரைக் காப்பாற்றினர்.


மேலும் படிக்க: திடீரென அருகில் வந்த பாம்பு: சிறுமி செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்


அந்த பெண் ஒரு பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் கிரண் பாலகிருஷ்ணா ஒரு மென்பொருள் பொறியாளர். சிறுமி மனநிலை சரியில்லாதவர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் அந்த பெண் மனமுடைந்து உள்ளார். அதேநேரத்தில் தனது தொழிலும் நன்றாக இல்லை என்பதால், இதற்கெல்லாம் அந்த பெண் குழந்தை தான் காரணம் எனக்கருதி, அந்த குழந்தையை கொல்ல சதிதிட்டம் தீட்டியுள்ளார். மேலும் தானும் தற்கொலை செய்துக்கொள்ள நினைத்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். 


மேலும் படிக்க: சீண்டிய மணமகன், கடுப்பாகி களேபரம் செய்த மணமகள்: ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ


இந்த கொலை சம்பவம் குறித்த பெண்ணுக்கு எதிராக கணவர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அதன் பின்னர் அந்த பெண் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் போலிஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். பெண்ணின் மனநலமும் பரிசோதிக்கப்படும். முன்னதாக, ஒருமுறை சுஷ்மா தனது பெண் குழந்தையை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார். இதையறிந்த சுஷ்மாவின் கணவர், ஸ்டேஷனுக்கு சென்று குழந்தையை கண்டுபிடித்து அழைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: உயிருடன் இருக்கும் மனைவியை ‘கொலை’ செய்ததாக 10 ஆண்டு சிறை அனுபவிக்கும் கணவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ