குஜராத்தின் சூரத் நகரில் ஒரு அதிர்ச்சிகரமான வேதனையான சம்பவம் அரங்கேறியுள்ளது. நகரின் கோதாதாரா பகுதியில், இளம் ஜோடி ஒன்று கருவை சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 மாத கருவை இரக்கமின்றி சாலையில் வீசிவிட்டு தலைமறைவான சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் ஜோடியை தேடி வருகின்றனர். கருவை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல் கொடுத்த பொதுமக்கள் 


இச்சம்பவம் குறித்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். கோதாரா பகுதியில் உள்ள லக்ஷ்மிநாராயணன் சொசைட்டி வாயில் அருகே கரு ஒன்று கிடப்பதாக காவலரிடம் மக்கள் தெரிவித்தனர். பொலிசார் உடனடியாக கருவைக் கைப்பற்றி அருகிலுள்ள சமீர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


கருவை தூக்கி எறிந்த ஜோடி 


சொசைட்டி வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனையிட்டபோது, ​​இரவு இருட்டில் ஒரு இளைஞனும், பெண்ணும் கருவை தூக்கி வீசுவது தெரிந்தது. அந்த இளைஞன் கையில் கோப்பு ஒன்றுடன் நின்று கொண்டிருந்த போது, ​​இளம்பெண் கருவை சாலையோரம் இருட்டில் வீசி எறிந்துள்ளார். சிசிடிவி காட்சிகளில் இருவரின் முகங்களும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இருவரும் ஒரே சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்களாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதன் அடிப்படையில் அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மேலும் படிக்க | Earthquake: நிலநடுக்கத்தின் கோரத்தண்டவத்தின் எதிரொலி! 21000த்தை தாண்டிய பலி எண்ணிக்கை


கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்திலும் இதுபோன்ற சம்பவம்


பிடிஐ அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இதேபோன்ற சம்பவம் மத்திய பிரதேசத்திலும் நடந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 40 வயது பெண் ஒருவர் 4 மாத கருவை உஜ்ஜைன் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றார். இருப்பினும், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். குழந்தையை வளர்க்க தன்னிடம் பணம் இல்லை, அதனால் தான் குழந்தை பெற விரும்பாமல், கருவை ஸ்டேஷனில் விட்டு சென்றதாக அந்த பெண் போலீசாரிடம் கூறியுள்ளார்கள்.


மேலும் படிக்க |  நெஞ்சை உலுக்கும் வீடியோ: துருக்கி நிலநடுக்கம் - 22 மணிநேர போராட்டம்... பெண் உயிருடன் மீட்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ