லோக்சபா காங்கிரஸ் எம்.பி.,க்கள் 6 பேர், 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோக்சபாவில் இன்று பூஜ்ய நேரத்தின் போது போபர்ஸ் ஊழல் விவகாரத்தை பாஜக எம்.பி.,க்கள் எழுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். 


இதற்கு லோக்சபா சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் பேப்பரை கிழித்து எறிந்தனர். 


இதனையடுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் காங்கிரஸ் எம்.பி.,க்கள் 6 பேரையும் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.


சஸ்பெண்ட் செய்த 6 காங்கிரஸ் எம்.பி.,க்களையும் அவையிலிருந்து வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.