மும்பையின் வைல் பார்லில் வேகமான சென்ற டிரக் ஓன்று ஃப்ளைஓவரில் இருந்து விழுந்த விபத்தில் 4 பேர் படுகாயம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலத்தின் வைல் பார்லே பகுதிக்கு அருகே  வியாழக்கிழமை இரவு வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு லாரி ஆட்டோ மற்றும் டாக்ஸியைத் தாக்கிவிட்டு ஃப்ளைஓவரில் இருந்து கீழே விழுந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.


லாரி டிரைவர் வாகனத்திலிருந்து குதித்ததாகவும் டாக்ஸியில் அமர்ந்திருந்த நான்கு பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து ஒரு போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது. விபத்துக்குப் பிறகு, சேதமடைந்த வாகனங்களை கிரேன் உதவியுடன் தூக்கி அகற்ற பொலிஸ் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர்.



மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அப்பகுதி காவல்துறையினர் இந்த விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.