புதுடெல்லி: சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) வழக்கு தொடர்பான போதைப்பொருள் வழக்கில் NCB அலுவலகத்தில் ரியா சக்ரவர்த்தி (Riya Chakraborty) விசாரிக்கப்படுகிறார். விசாரணை நடத்தப்படும் அலுவலகத்தில் போதைப் பொருள் வழக்கில் விசாரிக்கப்படும் ஷோவிக் சக்ரவர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரும் உள்ளனர். ரியா எந்த நீதிமன்றத்திலும் முன் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதால், அவர் கைது செய்யப்பட அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரியா இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன. ரியா அனைத்து வித நடவடிக்கைகளுக்கும் தயாராக இருப்பதாக ரியாவின் வழக்கறிஞர் கூறுகிறார்.


ALSO READ: Sushant Suicide Case: ரியா சக்ரவர்த்தியின் தந்தையை சிபிஐ இன்று மீண்டும் விசாரிக்கும்


சுஷாந்தின் சமையல்காரர் அரசாங்க சாட்சியாக மாறுகிறாரா?


முன்னதாக சனிக்கிழமை, சுசாந்த் சிங் ராஜ்புத்தின் சமையல்காரர் தீபேஷ் சாவந்தை NCB கைது செய்தது. அரசாங்க சாட்சியாக மாற தீபேஷ் தயாராக உள்ளார். மும்பை நீதிமன்றத்தில் திபேஷை NCB ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியது. செப்டம்பர் 9 வரை 3 நாட்கள் அவரை காவலில் எடுக்க அனுமதி கிடைத்துள்ளது.


சுஷாந்தின் சகோதரியும் அழைக்கப்பட்டார்


சுஷாந்த் சிங்கின் சகோதரியும், விசாரணைக்கு தகவல்களை அளிக்க டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையை அடைந்து அதிகாரியகளின் கேள்விகளுக்கு பதில்களை அளித்தார். சுஷாந்தின் சகோதரி மீது சிங்கும் டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையை அடைந்துள்ளார்.


டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் ஒரு புறம் ரியா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் NCB விசாரணை நடத்தி வருகிறது. மறுபுறம் CBI-யும் டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் தன் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சிபிஐ கடந்த சில நாட்களாக சுஷாந்தின் சகோதரியிடன் தொடர்ந்து பேசி வருகிறது. மீது மற்றும் ரியாவுடன் ஒன்றாகவும் CBI விசாரணை நடத்தியது.


ALSO READ: Sushant இன் போஸ்ட்மார்டம் அறிக்கை குறித்து சுப்பிரமணியன் சுவாமி "பகீர்" தகவல் வெளியீடு