மேற்கு வங்கத்தில் 2-ம் வகுப்பு மாணவியை அந்த பள்ளியின் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததால் பெற்றோர்கள் அந்த பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்கத்தில் உள்ள கார்மேல் என்ற தனியார் பள்ளி ஒன்றில் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் 2 -வகுப்பு மாணவியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். 


வீட்டிற்கு திரும்பிய குழந்தை பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறியது. இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 


மேலும் இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். 


பின்னர், இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள்  அந்த பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பள்ளியின் ஆசிரியரை கைது செய்தனர். 


மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.