இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 


இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை, தீயாக பரவிவரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.  இதனால், ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், மாநில அரசாங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக தரப்படும் என மத்திய அரசு அரசு அறிவித்துள்ளது.


ALSO READ | காப்பீடு செய்தும் பணம் கட்டினால் தான் சிகிச்சையா; மருத்துவமனைகளுக்கு ஆணையம் கடும் எச்சரிக்கை


 


முன்னதாக, மாநிலங்களும், தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை, அதன் தயாரிப்பாளர்களிடமிருந்து  நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து சீரம் நிறுவனம், தடுப்பூசி விலையை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்ற அளவிலும், தனியார்களுக்கு 600 ரூபாய்  என்ற அளவிலும் விலை நிர்ணயித்தது.


மேலும், ஆக்ஸிஜன் தொடர்பான மாநிலங்களின் தேவைகளை மனதில் கொண்டு,  அவற்றை விரைவில், மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்க, ரயில்வே மற்றும் விமானப்படையை திறம்பட பயன்படுத்துவதில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. 


ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR