புது டெல்லி: நிர்பயா கூட்டு கற்பழிப்பு மற்றும் கொலை குற்றவாளிகள் தூக்குத் தண்டனையை தள்ளி வைப்பதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளனர். எனவே இப்போது அவர்கள் ஒரு புதிய தந்திரத்தில் இறங்கியுள்ளனர். நான்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா திங்களன்று சிறைச் சுவரில் தனது தலையை மோதிக்கொண்டு தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் திகார் சிறைச்சாலையின் மூன்றாம் இடத்தில் தங்கியுள்ளார். தூக்கு தண்டனை நிறைவேற்ற இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் குற்றவாளி வினயின்  சம்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறை பொறுப்பாளர் வர்தன் கூறுகையில், நிர்பயாவின் குற்றவாளிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால் வினய் தன்னை காயப்படுத்திக் கொண்டார். இருப்பினும், வார்டன் அவரைத் தடுத்தார். ஆனால் அதற்குள் அவர் தலையில் காயம ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு முதலுதவிக்கு அளிக்கப்பட்டு மீண்டும் அவர் சிறைக்கு கொண்டு வரப்பட்டார் என்றார்.


 



தூக்கு தண்டனையை தள்ளி வைக்க முயற்சி:
சிறைச்சாலையின் கிரில்ஸில் கையை இணைத்து எலும்பு முறித்துக்கொள்ள குற்றவாளி வினய் முயன்றதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. பிப்ரவரி 16 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும், மறுநாள் வினயின் தாய் அவருக்கு தகவல் கொடுத்ததாகவும் அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறினார். பிப்ரவரி 17 அன்று, வினய் தனது தாயை சந்திக்க மறுத்துவிட்டார். புதிய மரண வாரண்ட் வெளியானதிலிருந்து வினயின் மனநிலை சரியில்லை என்றும், அவரது மனநிலை மோசமடைந்துள்ளதாகவும் வக்கீல் சிங் கூறினார்.


சிறை அதிகாரிகள் சொன்னார்கள் - எல்லாம் சரியாக உள்ளது
வினய் உடனான உரையாடலில் இது குறித்த எந்த அறிகுறியும் கிடைக்கவில்லை என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். "அவர் மிகவும் ஆரோக்கியமானவர், சமீபத்திய சைக்கோமெட்ரி சோதனையில், அவர் மிகவும் பொருத்தமாக இருந்தார்" என்று ஒரு சிறை அதிகாரி கூறினார். 


மார்ச் 3 ம் தேதி புதிய மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, சிறை வார்டன்கள் மற்றும் காவலர்களுடன் நான்கு குற்றவாளிகளின் அணுகுமுறை மிகவும் ஆக்கிரோஷமாகி இருக்கிறது என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார். அவரது நடத்தை முற்றிலும் மாறிவிட்டது. இருப்பினும், அவரது உணவு மற்றும் பானம் முன்பு போலவே உள்ளது. வினய் சர்மா மற்றும் முகேஷ் சிங் சாப்பிட மறுத்துவிட்டனர். ஆனால் அதிக வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக்கொண்டனர்.


24 மணி நேரமும் நான்கு பேரும் கண்காணிப்பு: 
முகேஷ், அக்‌ஷய், வினய் மற்றும் பவன்- இந்த நான்கு குற்றவாளிகளிலும், யாரும் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, ஏனெனில் இந்த நான்கு பேர் அவர்களை மேற்பார்வையிட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளின் சிறை அறையில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்க வார்டன்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகளின் செல்லுக்கு வெளியே காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலையின் மற்ற கைதிகளுடனான அவர்களின் தொடர்பு கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் எந்தவொரு கைதியும் அவர்களுடன் உணர்ச்சிபூர்வமான உறவைக் கொண்டிருக்கவில்லை.