புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத்தின் 70 இடங்களுக்கு இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் நடைபெறும். இன்று டெல்லியின் 1.47 கோடி வாக்காளர்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு தங்கள் உரிமையைப் பயன்படுத்துவார்கள். தேசிய தலைநகரில் அமைதியான முறையில் வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி காவல்துறை, உள்துறை காவலர்கள் உட்பட துணை ராணுவப் படையினரின் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதமேந்தியவர்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதையும் கண்காணிக்கும் வகையில் மாநில தேர்தல் தலைமையகம் (காஷ்மீர் கேட்) வளாகத்தின் முதல் தளத்தில் மிக முக்கியமான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 2015 சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 67 இடங்களும், பாஜகவுக்கு 3 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டசபை தேர்தலுக்கான வாக்களிப்பு ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டெல்லி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதோடு, பண்டிகைகளில் வீடுகள் அலங்கரிக்கப்படுவதைப் போலவே இந்த வாக்குச் சாவடிகளும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. பலூன்கள் முதல் பூக்கள் வரை வாக்குச் சாவடியில் அலங்காரங்களுக்கு பஞ்சமில்லை.


டெல்லியில் 70 சட்டசபை இடங்களுக்கு மொத்தம் 13750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல வாக்குச் சாவடிகள் சிறந்த வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதில், வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிவப்பு கம்பளம், மலர்களால் அலங்காரம் மற்றும் மருத்துவர்கள் வசதியும் உள்ளது. பல வாக்குச் சாவடிகளில் சிறப்பு செல்ஃபி புள்ளிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புள்ளிகள் நீங்கள் வாக்களிக்கும் மற்றும் செல்ஃபி எடுக்கக்கூடிய வாக்களிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


டெல்லி தேர்தலில் 1,47,86,382 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. அதில் 2,32,815 வாக்காளர்கள் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள். தேர்தலுக்காக மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது. டெல்லியில் 70 சட்டசபை இடங்களுக்கு 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க முழு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. நடத்தை விதிகளை மீறி யாராவது ஆட்சேபிக்கத்தக்க செய்தியை அனுப்பினால் அல்லது சமூக ஊடகங்களில் செய்தி பகிர்ந்தால், அவர்கள் குறித்து நோடல் அதிகாரியின் எண் 81300 99105 மற்றும் தொலைநகல் 011-28031130 க்கு புகார் செய்யலாம் என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர். டெல்லிவாசிகள் தங்கள் குறைகளை acp-cybercell-dl@nic.in என்ற மெயிலுக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.