முசாஃபர்நகர்: மற்றுமொரு கொடுமையான சம்பவத்தில், கணவரின் கண்முன் துப்பாக்கி முனையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், 4 பேர் குழுவாக அவரையும் அவரது கணவரையும் மிரட்டி பின் அவரை அருகில் இருந்த கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று இந்த கொடுமையை செய்துள்ளனர்.


அவரது கணவரை தாக்கியது மட்டும் அல்லாமல், அவரது குழந்தையையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.