முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், முத்தலாக் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வளங்கியுள்ளார்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த முத்தலாக் முறைக்கு தடைக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு, ‘இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வது இஸ்லாமிய மதத்தின் மரபாகும். இது, பெண்களுக்கு எதிரான அடக்குமுறையாக கருதப்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், முத்தலாக் முறை செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றம் பச்சைக்கொடி காட்டிய முத்தலாக் மசோதாவில், திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், முத்தலாக் மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.


இந்நிலையில், பாராளுமன்றத்தில்  முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார். ‘முத்தலாக்’ முறைக்கு தடை விதிக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா’ மக்களவையில் நிறைவேறி விட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.


இதை தொடர்ந்து, முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவதாக நேற்று தெரிவித்திருந்தது. மேலும், முத்தலாக் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 


இந்த அவசர சட்டப்படி உடனடி முத்தலாக் முறையில் விவாகரத்துச் செய்வது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும். பாதிக்கப்பட்ட மனைவி அல்லது அவரது ரத்த சம்பந்தம் உடைய நெருங்கிய உறவுகள் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். உடனடி முத்தலாக் வழக்கில் கைதானால் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறலாம். முத்தலாக் வழங்கியபின் கணவன்-மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் வழக்கை திரும்பப் பெறலாம் ஆகிய மூன்று முக்கிய திருத்தங்களுடன், உடனடி முத்தலாகிற்கு எதிரான அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.