ஜம்மு காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் ஹஜின் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் ஹஜின் பகுதியில் மொத்தம் 8 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. 


இந்த சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். காலை 5 மணி முதல் இந்த தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நெருங்கி விட்டதாகவும், என்கவுன்ட்டர் தொடர்ந்து வருவதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு தற்போது வரை நடந்து வருகிறது.