மனைவியின் சடலத்தை ஒரு பெட்டியில் பூட்டி அவரது சொந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கட்முக்தேஷ்வருக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் காவல் நிலையத்திற்கு வந்து தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார். இறந்தவரின் தந்தை DM கோண்டாவின் OSD ஆக நியமிக்கப்பட்டுள்ளார். போலீசார் கணவரிடம் கடுமையாக விசாரித்ததில், விஷயம் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் தந்தையும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட தந்தை மற்றும் மகனை லக்கிம்பூர் கெரி போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராய்பூர் கிராமத்தில் வசிக்கும்  சிவராஜ் சுக்லாவின்  மகள் வந்தனாவுக்கும், லக்கிம்பூர் நகரின் மொஹல்லா பகதூர்நகரில் வசிக்கும் அபிஷேக் தீட்சித்துக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வந்தனா BAMS மேலும் அவரது கணவர் அபிஷேக்-ம் ஒரு BAMS மருத்துவர். இருவரும் சீதாப்பூர் சாலையில் கௌரி என்ற பெயரில் ஒரு மருத்துவமனையைக் கட்டி, அதில் பயிற்சி செய்து வந்தனர்.  சில காலங்களுக்கு பிறகு அவர்களுக்குள் தகராறு தொடங்கியது. வந்தனா சமல்பூரில் உள்ள லக்ஷ்மி நாராயண் மருத்துவமனையில் பயிற்சி செய்யத் தொடங்கிய பிறகு, அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.


கர்முக்தேஷ்வரில் நடத்தப்பட்ட இறுதிச் சடங்குகள்


நவம்பர் 26 அன்று, கணவர் அபிஷேக் மற்றும் அவரது தந்தை கவுரி சங்கர் அவஸ்தி ஆகியோர் வீட்டில் வந்தனாவை கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. அடிப்பட்டதில் வந்தனா இறந்தார். இருவரும் வந்தனாவின் சடலத்தை பெட்டியில் வைத்தனர். இரயில் நிலையத்திலிருந்து ஒரு பிக்-அப் வண்டியை வாடகைக்கு வந்து, வந்தனாவின் உடலை கௌரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இறந்தவரின் உடல் இரவோடு இரவாக மருத்துவமனையில் வைக்கப்பட்டது. காலையில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து, வந்தனாவின் உடலை 321 கிமீ தொலைவில் உள்ள கட்முக்தேஷ்வருக்கு எடுத்துச் சென்றனர். அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.


மேலும் படிக்க | தனது முகத்தில் ஆசிட் வீசிய காதலனையே கரம் பிடித்த காதலி


தந்தை மற்றும் மகனை கைது செய்த லக்கிம்பூர் போலீசார் 


நவம்பர் 27 அன்று மாலை, குற்றம் சாட்டப்பட்ட கணவர், வந்தனா எங்கோ சென்றுவிட்டதாக இறந்தவரின் தந்தைக்கு தெரிவித்தார். தந்தை லக்கிம்பூருக்கு வந்து, அவரது கணவருடன் கோட்வாலி சதாரில் வந்தனாவை காணவில்லை என்று புகார் அளித்தார். போலீசார் விசாரணையை தொடங்கியபோது, ​​சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர். போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | ஜூஸில் ஆசிட்... காதலனை கொன்ற காதலி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி


மேலும் படிக்க | தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! முக ஸ்டாலின் அதிரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ