நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்து ; சொத்தை பங்கு கேட்டவருக்கு நேர்ந்த கதி!

ஓசூர் அருகே நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்ததுடன் சொத்தில் பங்கு கேட்டதால் கத்தியால் குத்தி சரமாரியாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 5, 2022, 02:15 PM IST
  • நண்பனின் தங்கையை காதலித்து திருமணம் செய்தவர்
  • மாமியார் வீட்டில் சொத்தை பிரித்து கேட்ட காதலன்
  • ஆத்திரத்தில் அண்ணனின் வெறிச்செயல் - பயங்கரம்
நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்து ; சொத்தை பங்கு கேட்டவருக்கு நேர்ந்த கதி! title=

ஓசூர் அருகே உள்ள கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சந்தோஷ். இவரும் குமுதேப்பள்ளியை சேர்ந்த 26 வயதான முருகேசன் ஆகியோர் பல வருடங்களாக நண்பர்களாய் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், சந்தோஷ் அடிக்கடி முருகேசன் வீட்டிற்கு சென்றுவந்ததால் முருகேசனின் தங்கை மீனா உடன் காதல் மலர்ந்துள்ளது. இது அண்ணன் முருகேசனுக்கு தெரியவந்ததால், இருவரும் எதிரிகளாக மாறி உள்ளனர். 

hosur murder,crime,கொலை,சந்தோஷ் கொலை

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ், மீனாவை வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின்னர், அண்மையில் முருகேசன் வீட்டார் நிலத்தை விற்க முயன்றபோது மீனாவின் சொத்தை பிரித்து தருமாறு சந்தோஷ் கேட்டதாக கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்ததற்கே கோபமாக இருந்த முருகேசன், சொத்தை கேட்டதற்கு ஆக்ரோஷத்துடன் சுற்றி திரிந்திருக்கிறார். இதனால் முருகசேன், தங்கை வீட்டிற்கு சென்று உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என சந்தோசை மிரட்டி, அவ்வப்போது போன் மூலமாக சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே, சம்பவத்தன்று தியாகரசனப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய சந்தோஷை முருகேசன் மற்றும் அவர்களது நண்பர்களான குமார், மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் சுற்றி வளைத்தனர்.

மேலும் படிக்க | பிறந்தநாளன்று மதுவிருந்து கொடுத்த கூலிக்கு நண்பனை தீர்த்துக்கட்டிய கொடூரம்!

தப்பியோட முயன்ற சந்தோஷை கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார் உடலை மீட்டு, தலைமறைவாக இருந்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | பலே திருடர்கள் - சிசிடிவியில் பதிவான செருப்பை வைத்து துப்பு துலக்கி கெத்து காட்டிய போலீசார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News