உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலாந்த்ஷாரில், பாலில் தூக்கா மாத்திரை கலந்து கொடுத்து, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன்னை பார்க்க வந்த மகளை, பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அவரது தந்தை. இந்த சம்பவங்கள் உத்தரப்பிரதேச மாநில புளந்த்ஷாஹர் அருகே போபூர் கிராமத்திற்கு நடந்துள்ளது. இதனையடுத்து, காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணின் தந்தை மீது பாலியல் பலாத்காரம் புகார் செய்யப்பட்டுள்ளது.


இதைக்குறித்து, போலீஸ் அதிகாரி கூறியது, பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது தாயார் மற்றும் உறவினருடன் தந்தையை சந்திப்பதற்காக வந்துள்ளார். அப்பொழுது தனக்கு பால் குடிக்க கொடுத்ததாகவும், அதில் போதை போன்ற பொருள் கலந்திருந்தார். பின்னர் என்னை பலாத்காரம் செய்தார் என பெண் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. 


குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண்ணின் தந்தைக்கு போலீசார் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.