உத்தரப் பிரதேசத்தின் அசாம்கர் நகருக்கு அருகே உள்ள பஸ்சிமி கிராமத்தின் கிணற்றில் கடந்த நவ. 15ஆம் தேதி ஒரு உடல் கிடப்பதை உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், உடலை மீட்டு அவர்கள் விசாரணை நடத்தினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், உயிரிழந்தவர் ஆராதனா என்ற இளம்பெண் என அடையாளம் காணப்பட்டார். அவரை கண்டெடுத்தபோது, அவர் அரை நிர்வாணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் உடல் கிடைப்பதற்கு இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்னரே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆராதனாவின் முன்னாள் காதலன் பிரின்ஸ் யாதவ் என்பவர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை நேற்று முன்தினம் கைதுசெய்தனர். 


மேலும் படிக்க | காதலுக்கு இறப்பில்லை... உயிரிழந்த காதலியை திருமணம் செய்த இளைஞர் - மனதை உலுக்கும் வீடியோ


மேலும், நவீனை போலீசார் கைதுசெய்ய சென்றபோது, அவர்களிடம் இருந்து தப்பிக்க தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அவர் போலீஸை நோக்கி சுட்டுள்ளார். இதனால், போலீசார் தொடுத்த எதிர்தாக்குதலில் பிரின்ஸ் யாதவ் குண்டு பாய்ந்து காயமடைந்தார். இதன்பின்னர், நவீனுக்கு சிகிச்சையளித்து பெண்ணின் தலை இருக்கும் இடத்தை அடையாளம் கூற அந்த இடத்திற்கு போலீசார் அழைத்துசென்றனர். ஆராதனாவின் தலையையும் அவர்கள் கைப்பற்றினர். 


ஆராதனா அதே மாவட்டத்தை சேர்ந்த இஷாக் பூர் கிராமத்தில் வசித்துள்ளார். ஆராதனாவுக்கும், பிரின்ஸ் யாதவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதில், ஆராதனா வேறு ஒருவரை கடந்தாண்டு திருமணம் சென்றுள்ளார். தொடர்ந்து, அவர்கள் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்துள்ளனர். இருப்பினும், தன்னைவிட்டு மற்றொருவரை திருமணம் செய்துகொண்ட விரக்தியில் நவீன், ஆராதனாவை கொலை செய்துள்ளார். மேலும், நவீன் கொலை செய்வதற்கு அவரின் பெற்றோர்கள், உறவினர்கள் உதவிசெய்துள்ளதுதான் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த நவ. 9ஆம் தேதி, நவீன், ஆராதனாவை கோயிலுக்கு பைக்கில் அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சென்றவுடன், கரும்பு தோட்டத்தில் உறவினர் சர்வேஷ் உதவியுடன், ஆராதனாவின் கழுத்தை நெறித்து கொலைசெய்துள்ளனர். 


பின்னர், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆராதனாவின் உடலை 6 துண்டுகளாக வெட்டி, பாலிதீன் பையில் போட்டு, கிணற்றில் வீசியுள்ளனர். மேலும், ஆராதனாவின் தலையை சிறிதுதூரத்திற்கு சென்று குளத்திற்குள் வீசி சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்பட்ட கூர்மையான ஆயுதம், நாட்டு துப்பாக்கி, அதனஅ குண்டுகள் ஆகியவை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நவீன் யாதவ் உள்பட உறவினர் 7 பேர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.    


மேலும் படிக்க | நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ