உத்தரகண்ட் மாநில முதல்வராக பா.ஜ.,வின் திரிவேந்திர சிங் ராவத் தேர்வு. நாளை (மார்ச் 18) பதவியேற்க உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ., 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த முதல்வராக யார் என்பதை தேர்வு செய்ய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று டேராடூனில் நடந்தது. இதில் சட்டசபை குழு தலைவராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டன.