குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், குடியரசு துணை தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கய்யா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகிறார்கள். 


இதற்கான தேர்தல் நாளை காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 7 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏற்கனவே நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று நாட்டின் 14-வது குடியரசு தலைவராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.