குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய காவலர் மீது பொது மக்கள் சரமாரியாக தாக்குதல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்ஷாஹர் பகுதி எப்போதும் பரபரப்புடன் இருக்கும். மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. அப்பகுதியில் குடிபோதையில் மனோஜ் என்ற போலீஸ்காரர் கார் ஒட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்போது மது போதையில், அவர் காரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மோதி விபத்துக்குள்ளானது. 


இதையடுத்து அப்புகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மது போதையில் இருந்த காவல்துறையினரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.



இதையடுத்து, அந்த மதுபோதையில் இருந்த காவல்துறையினர் மீது வாக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.