டிராக்டர் பந்தயத்தின்போது தகர கொட்டகை இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீகங்காநகரில் டிராக்டர் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தப் பந்தயத்தைக் காண்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, நூற்றுக்கணக்கானோர் பந்தயம் நடைபெறும் பகுதியில் இருந்த தகரக் கொட்டகையின் மேல் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அதிக பாரம் தாங்காத தகரக்கொட்டகை திடீரென சரிந்து விழுந்தது. 


இந்த விபத்தில் கொட்டகையின் மேல் நின்றுகொண்டிருந்த ஏராளமானோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் ஸ்ரீகங்காநகர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  



டிராக்டர் போட்டி நடத்துவதற்கு உள்ளூர் நிர்வாகத்திடம் போட்டி அமைப்பாளர்கள் அனுமதி பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.